முன்னாள் தமிழக அமைச்சர் கோ.சி.மணியின் நினைவு நாளையொட்டி அமைதி பேரணியும் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து,மாவட்ட தி.மு.க சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில், முன்னாள் தமிழக அமைச்சர், சோழ மண்டல தளபதி என்கிற கோ. சி.மணி அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. சார்பாக நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதையொட்டி குத்தாலத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம் முன்னிலையில், திமுக மாவட்ட கழக செயலாளர் நிவேதா எம் முருகன் தலைமையில்,மாவட்ட அளவில் உள்ள நகர, ஒன்றிய செயலாளர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் கழகத்தினர், குத்தாலம் பேரூராட்சி அலுவலகத்தில்லிருந்து அமைதி பேரணி புறப்பட்டு, கோ.சி.மணி சதுக்கத்தில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவரின் சொந்த கிராமமான மேக்கிரிமங்களத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான தி.மு.க பொருப்பாளர்களும், கட்சியினரும் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் கோ.சி.மணியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Also Read
- பம்மல் வடக்கு பகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பாக நடைபெற்ற உழைப்பாளர் தின விழா
- சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கேட்ட வழக்கறிஞருக்கு சம்மன்..
- மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தில், பெண்ணை இருசக்கர வாகனத்தில் மோதுவது போல் வந்த வாலிபர்.. காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக புகார்..
- மயிலாடுதுறையில் தனது வீட்டில் திருவள்ளுவர் சிலை திறந்த மென்பொருள் பொறியாளர்
- இந்த வயசுலயும் பாட்டி செஞ்சிட்டு இருக்கிற வேலையை பாருங்க!!! எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு தொடரும் பாட்டியின் செயல்!!!