HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

செய்தி

தற்செயல் விடுப்பு எடுத்து வருவாய் துறை அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம்

Revenue Department Protest

Revenue Department Protest : தமிழக அரசை கண்டித்து தற்செயல் விடுப்பு எடுத்து வருவாய் துறை அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில் போராட்டம், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது, அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Revenue Department Protest
Revenue Department Protest

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, திமுக சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது சரண்டர் விடுப்பு தொகை மீண்டும் வழங்குவதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க : Priyamani Biography, Wiki, Age, Family, Movies, TV Shows, Photos

3 ஆண்டுகள் கழிந்த பின்னும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை இதை கண்டித்து அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக 13/02/2024 லில் தமிழ்நாடு அரசு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது இதன் விளைவாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களில் அரசு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அரசு அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தங்கள் போராட்டம் மேலும் தீவிரமாகும் என அப்போது அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க : உலக மக்களால் அதிகம் விரும்பப்படும் எட்டு சூப்பர் பூனைகள்! Eight super cats

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்