HOME

STORIES

google-news

FOLLOW

JOIN

FOLLOW

AdikesavaPerumalThirukalyanamUtsavam : குத்தாலம் அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் ஆலய திருக்கல்யாணம் உற்சவம், ஏராளமான பக்தர்கள் வழிபாடு:-

AdikesavaPerumalThirukalyanamUtsavam
AdikesavaPerumalThirukalyanamUtsavam

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் 1500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ செங்கமலத்தாயார் உடனுறை ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.ஆலயத்தின் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஊஞ்சல் உற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்காரம் போன்றவை நடைபெற்ற நிலையில் அதன் பிறகு திருமஞ்சன வைபவம் நடைபெற்றது இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு பால், பன்னீர், இளநீர் சந்தனம் ஆகிய திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையும் படிங்க : மதிய உணவிற்கு பின் இனிப்பு சாப்பிடுவது நல்லதா? என்ன இனிப்பு சாப்பிடுவது ?

அதை தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் வசந்த மண்டபத்திற்கு சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர் அதனை எடுத்து வேதியர்கள் மந்திரங்கள் ஓத திருக்கல்யாண வைபவங்கள் சடங்குகள் நடைபெற்றது. இறுதியாக மாலை மாற்றும் நிகழ்ச்சியும் மாங்கல்யதாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க : விகடகவிக்கு வேறு சொல் | Another Name of Vikadakavi in Tamil

மேலும் சுவாரஸ்யமான செய்திகளுக்கு வி தமிழ் நியூஸ் வாட்ஸ்அப் whatsapp சேனலை கிளிக் செய்து பின்தொடரவும்