75th Republic Day Celebration : நாட்டின் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைவருக்கும் மரியாதை ஏற்றுக் கொண்டார்.

நாட்டின் 75 ஆவது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து தொடர்பு சமாதான புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்க விட்டார்.
Also Read : இளந்தமிழ் மன்றம் 3000 மாணவர்களை ஒருங்கிணைத்து மாபெரும் உலக சாதனை
தொடர்ந்து தியாகிகள் கௌரவிக்கப்பட்டதுடன் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 542 நபர்களுக்கு நற்சான்றிதழ்களும் 50 பயனாளிகளுக்கு சுமார் 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் தமிழக அரசு சார்பில் வழங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


