Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

Pudhan Kilamai Mandiram | புதன் கிழமை செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | புதன் கிழமை சொல்ல வேண்டிய Best 6 துதி

Pudhan Kilamai Mandiram : கிழமைகளில் புதன்கிழமைக்கு எப்போதுமே ஒரு தனிப்பெரும் சிறப்பு உண்டு. இதனை சொன்னாலே உடனே உங்களுக்கு நிச்சயமா ஞாபகம் வந்திருக்கும் பொன் கிடைத்தாலும்…

Pudhan Kilamai Mandiram : கிழமைகளில் புதன்கிழமைக்கு எப்போதுமே ஒரு தனிப்பெரும் சிறப்பு உண்டு. இதனை சொன்னாலே உடனே உங்களுக்கு நிச்சயமா ஞாபகம் வந்திருக்கும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்னும் பழமொழி.

Pudhan Kilamai Mandiram

எல்லா வகையான சுபகாரியங்களுக்கும் புதன்கிழமை நாம பயன்படுத்திக் கொள்ளலாம் இப்படி ஒரு உயர்ந்த நாளாக புதன் கருதப்படுகிறது. இந்த நாளுக்குரிய பகவான் அது எல்லாருக்குமே தெரியும் புதன் கிரகத்திற்கு தேவதையாக விளங்கக் கூடியவர் தான் மகாவிஷ்ணு. ஒவ்வொரு புதன்கிழமைகளில் காலையில குளித்து முடித்து விளக்கு ஏற்றும் போது பின்வரும் துதியை கூறுவதன் மூலமா குடும்பத்துல செல்வ செழிப்பு, குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம், ஆகியவைகளை அடைவீர்கள்.

Pudhan Kilamai Mandiram in Tamil

புதன் பகவானுக்கான துதி

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புதபக வானே பொன்னடி போற்றி
பதந்தந்து ஆள்வாய் பண்ணொளியானே
உதவியே அருளும் உத்தமர் போற்றி

விஷ்ணு பகவான் துதி

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமா வென்ற யிரண்டெழுத்தினால்

விநாயகர் துதி

வக்ர துண்ட மஹாகாய
ஸூர்ய கோடி ஸமப்ர‌ப !
அவிக்னம் குருமே தேவ‌
ஸர்வ கார்யேஷு ஸர்வதா !!”

சிவன் துதி

வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உந்தன் விருப்பன்றே.

முருகன் துதி

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனி வேல் வாழ்க
குக்குடம் வாழ்க -செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க
ஆணை தன் அணங்கு வாழ்க
மாறில்லா வள்ளி வாழ்க
வாழ்க சீர் அடியார் எல்லாம் !

அம்பாள் துதி

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க