Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

Remedy for own business | சொந்த தொழிலில் முன்னேற்றம் அடைய பரிகாரம்

Remedy for own business : இக்காலத்தில் சுயதொழில் செய்து லாபம் அடைவது மிகவும் கடினமானது.ஒரு சிலரின் கைராசியால் அவர்கள் செய்யும் தொழிலில் ஆதாயத்தை கொடுக்கும். ஆனால்…

Remedy for own business : இக்காலத்தில் சுயதொழில் செய்து லாபம் அடைவது மிகவும் கடினமானது.ஒரு சிலரின் கைராசியால் அவர்கள் செய்யும் தொழிலில் ஆதாயத்தை கொடுக்கும். ஆனால் ஒரு சிலரின் கைராசி தொழிலில் முதலீடு செய்த தொகையைக்கூட அடைய முடியாமல் மிகவும் கஷ்டப்படுவார்கள். அப்படி லாபம் அடையாமல் இருக்கும் வியாபாரிகளுக்கு இந்த பதிவு பயன் நிறைந்ததாக இருக்கும்.

சுயதொழில் என்பது அவர்களின் கைராசியை பொறுத்து அமைகிறது. நாம் சிறிய கடையினை வைத்தால் கூட எல்லா வாடிக்கையாளர்கள் அனைவரையும் வசப்படுத்தும் தன்மை நமக்கும் நம் கடைக்கும் இருக்க வேண்டும்.

அதாவது சுயதொழிலில் மயக்கூடிய தன்மை இருக்க வேண்டும். வசியம் என்பது லாபத்தையும், வாடிக்கையாளர்களையும் நம் வசப்படுத்துவது என்பதைத்தான் இந்த பதிவில் காண போகிறோம். அதாவது கீழே கொடுத்துள்ள இந்த 2 பொருட்களை வைத்து எளிய பரிகாரம் செய்வது என்பதை பின் வருமாறு பார்ப்போம் வாருங்கள்.

தொழிலில் லாபம் அடைய : Remedy for own business

Remedy for own business
Remedy for own business

தொழில் செய்யும் இடத்தில பணம் ஈர்க்கும் பொருளை வைத்தாலே போதும், பல மடங்கு லாபம் அதிகரிக்கும்.அது என்னப்பொருள் அதாவது ஒன்று கசகசா மற்றொன்று கஸ்தூரி மஞ்சள் ஆகும். இந்த இரண்டு பொருளிற்கும் பணத்தை ஈர்க்கும் தன்மை உள்ளது.

பொதுவாக இயற்கையாகவே மஞ்சளுக்கு வசீகரிக்ககூடிய தன்மை கொண்டது, வாசனை நிறைந்த கஸ்தூரி மஞ்சளுக்கு வசீகரிக்கும் தன்மை அதிகமாகவே இருக்கிறது. அடுத்தபடியாக சமையலுக்கு பயன்படுத்தும் கசகசாவிற்கு பணத்தை ஈர்க்கக்கூடிய தன்மை கொண்டது. இவ்வாறு ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
எனவே பூஜை செய்யும் அறையில் அல்லது தொழில் செய்யும் இடத்தில ஒரு கிண்ணத்தில் கசகசாவையும் மற்றொரு கிண்ணத்தில் கஸ்தூரி மஞ்சளையும் வைக்கவேண்டும்.

பிறகு இரவில் தூங்குவதற்கு முன்பாக ஒரு டம்ளரில் நீரை ஊற்றி.அந்த நீரில் கசகசா மற்றும் சிறிதளவு கஸ்தூரி மஞ்சளை சேர்த்து ஊறவைத்து விடுங்கள். மறுநாள் காலையில், பூஜை அறையினை சுத்தம் செய்து,கடவுளுக்கு பூஜை செய்தவுடன், அந்த தண்ணீரினை எடுத்து,உங்கள் கடையின் உட்புறத்திலும், மூலை முடுக்கிலும் தெளிக்கவும், அதே போல் தொழில் செய்யும் இடத்தின் வாசலிலும் தெளிக்கவும்.

நீங்கள் இந்த சிறிய பரிகாரத்தை செய்வதன் மூலம் பலமடங்கு நல்ல பலன்களை அடையலாம்.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க