Kutthalam camp: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமானது குத்தாலம் ஒன்றியகுழு தலைவர் தலைமையில் நடந்தது.
Kutthalam camp ஒன்றியகுழு தலைவர் தலைமையில் நடந்தது
இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் எம்எல்ஏ வுமான எம். முருகன் கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார். இந்த முகாமில் பொது மருத்துவம், தோல் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், யுனானி ஆயுர்வேதம், கண் சிகிச்சை மற்றும் எலும்பு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.
Read Also : டீயில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவதால்?

மேலும் தடுப்பூசி செலுத்துதல், இசிஜி,இரத்த நோய் கண்டறியும் ஆய்வகம் போன்ற முகாம்கள் செயல்பட்டதால் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு சோதனைகளை எடுத்து கொண்டார்கள். உடல் பாதிப்பு அடைந்தவர்களுக்கு கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மேல் சிகிச்சை பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் மருத்துவர்கள்,செவிலியர்கள், ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், அப்துல் மாலிக், ராஜா போன்ற நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் வருவாய் துறையினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Read Also : தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரவிழா பேரணி
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


