Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

உங்களுக்கு சிவபெருமானின் 3 மகள்கள் யாரென்று தெரியுமா?

3 Daughter of Shiva Peruman : சிவபெருமான் துறவியாகயிருந்தது முதல் இல்வாழ்க்கைகைக்கு சென்றது வரை சிவபுராணம் மிகவும் சிறப்பாக விவரிக்கிறது. பிறகு அவர் விநாயகர், முருகன்…

3 Daughter of Shiva Peruman : சிவபெருமான் துறவியாகயிருந்தது முதல் இல்வாழ்க்கைகைக்கு சென்றது வரை சிவபுராணம் மிகவும் சிறப்பாக விவரிக்கிறது. பிறகு அவர் விநாயகர், முருகன் மற்றும் ஐயப்பன் ஆகிய மூன்று ஆண் மகன்களுக்கு தந்தையாக தனது பொறுப்பை நன்கு நிறைவேற்றினார் என்பது நாம் அறிந்து கொண்ட செய்தி தான். ஆனால், சிவனுக்கும் மூன்று மகள்கள் இருப்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகளில்லை.

இந்த பதிவில் நாம் தெரிந்துகொள்ள போவது சிவபெருமானின் மூன்று மகள்கள் யார் யார் என்பதை பற்றி, நாம் இப்பொழுது தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க சிவபெருமானின் மூன்று மகள்கள் யார் யார் என்று இப்பதிவை படித்து தெரிந்துகொள்வோம்.

3 Daughter of Shiva Peruman
3 Daughter of Shiva Peruman

3 Daughter of Shiva Peruman

அசோக சுந்தரி:

சிவபெருமானின் முதலாவது பெண் பெயர் அசோக சுந்தரி என்று கூறப்படுகிறது. இவர்களை பற்றி பத்ம புராணத்தில் கூறப்பட்டிருகிறது. சிவன் பார்வதிக்கு பெண் பிள்ளையாக அசோக சுந்தரி பிறந்தாள். அசோக சுந்தரி நகுஷன் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஜெயாதி என்ற குழந்தையை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த அசோக சுந்தரியை குஜராத் மாநிலத்தில் மிக பெரிய அளவில் இவரை அறிந்து வழிபடுகின்றனர்.

ஜோதி:

சிவபெருமானின் இரண்டாவது மகளின் பெயர் ஜோதி. ஜோதி என்றால் ஒளி என்று பொருள் ஆகும். ஜோதியின் பிறப்பிற்கு இரண்டு முக்கிய புராண கதைகள் கூறப்படுகிறது. முதல் கதையில் ஜோதி சிவபெருமானுடைய ஒளிவட்டத்திலிருந்து பிறந்தார் எனவும். சிவனுடைய உடல் வழிபாடு என்றும் சொல்லப்படுகிறது. மற்றொரு கதையில் பார்வதி தேவையுடைய நெற்றியிலிருந்து வெளியான ஜோதியிலிருந்து பிறந்ததாக கூறப்படுகிறது.

வாசுகி

சிவபெருமானின் மூன்றாவது மகள் பெயர் வாசுகி, வாசுகி என்பவர் அனைத்து ஆலயங்களிலும் வழிபடும் பாம்பு தெய்வமாக இருகாங்க.வாசுகி, சிவபெருமானுடைய மகள் ஆனால் பார்வதியின் மகள் இல்லை. ஏன் என்றால் பாம்புகளுடைய கடவுளாகிய கத்ரு செதுக்கி சிலைகள் மீது சிவபெருமானுடைய உயிரணுக்கள் விழுந்ததால் வாசுகி பிறந்ததாககூறப்படுகிறது. வாசுகிக்கு மானசா என்ற மற்றொரு பெயரும் உண்டு.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க