Karuppu Kayiru Intha Rasikarargal Aniyakudathu
எந்தெந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிற்றை அணியக்கூடாது
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் இந்த கண்ணடி நமக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த திருஷ்டியானது மனிதனுக்கு எத்தனை வயதானாலும் மிக சுலபமாக வந்தடைகிறது. இந்த கண் திருஷ்டிக்கு வயது வித்தியாசமே கிடையாது. நமது முன்னோர்கள் இந்த கண் திருஷ்டியை போக்குவதற்கு சில விஷயங்களை கடைபிடித்துள்ளார்கள்.
அவற்றில் ஒன்றுதான் கருப்பு கயிறை காலில் கட்டுவது. ஆனால் இந்த கருப்பு கயிற்றை எல்லோரும் கட்டுவதில்லை ஒரு சிலருக்கு ஒத்துக்கொள்ளாது என்றும் சொல்வார்கள். அது போல ஆன்மீகத்தில் கருப்பு கயிற்றை கட்டக்கூடாதாம். ஆனால் அவற்றை எந்தெந்த ராசிக்காரர்கள் கட்டக்கூடாது, எந்தெந்த ராசிக்காரர்கள் இந்த கருப்பு கயிற்றை கட்டிக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

எந்தெந்த ராசி உடையவர்கள் கருப்பு கயிற்றை கட்டிக்கொள்ளலாம் : Karuppu Kayiru
இன்றைய காலகட்டத்தில் இந்த கருப்பு கயிற்றை அணிந்து கொள்வது ஸ்டைலாக மாறிவிட்டது என்றே சொல்லாம். கருப்பு கயிற்றை யார் வேண்டுமாலும் கையிலோ அல்லது காலிலோ கட்டிக்கொள்கிறார்கள். கருப்பு கலர் சில பேர் ஒத்துக்காது என்று சொல்கிறார்கள்.அவர்கள் அனைவரும் கருப்பு கலர் பக்கமே போக மாட்டார்கள்.
மகரம்,கும்பம் மற்றும் துலாம் ராசிக்காரர்கள் இந்த கருப்பு கயிற்றை அணிந்துகொள்ளாம். இந்த மூன்று ராசியில் பிறந்த அனைவரும் கருப்பு கயிரையும், கருப்புநிற ஆடைகளையும் உடுத்திக்கொள்ளலாம்.
கருப்பு கயிற்றை எந்தெந்த ராசிக்காரர்கள் அணியக்கூடாது :
மேஷம் மற்றும் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் கருப்பு கயிற்றை மற்றும் ஆடைகளை பயன்படுத்த கூடாதாம். ஏனென்றால் ஆன்மீகத்தில் இந்த இரண்டு ராசிக்காரர்களையும் செவ்வாய் கிரகமானது ஆக்கிரமித்து கொள்கிறது. ஆகவே இந்த ராசிக்காரர்கள் கருப்பு நிறத்தை அணிந்து கொள்வதால் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். மேலும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என்று ஆன்மீக குறிப்பில் கூறப்படுகிறது.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க

