Kadan Problem Solving Easy : பணக்கஷ்டம் இல்லாதவர்கள் என்று யாரையும் சொல்லவே முடியாது. இந்த காலகட்டத்தில் எல்லோருக்குமே பணக்கஷ்டம், கடன் பிரச்சனை போன்ற தொல்லைகள் இருக்கும். மனிதனாக பிறந்த அனைவருமே ஏதோ ஒரு சூழ்நிலையின் காரணமாக கடன் வாங்குகிறார்கள். நாளடைவில் அந்த கடனை அடைப்பதற்கு கஷ்டப்படுகிறார்கள்.

சிலர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் கையில் தங்குவதே இல்லை என்று புலம்புகிறார்கள். கடன் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டும் என்று பல பரிகாரங்கள் செய்தும் பலன் கிடைக்கவில்லை என்று சொல்பவர்களுக்கும். இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன் அடையுங்கள்..!
Kadan Problem Solving Easy
கடன் பிரச்சனை எல்லோருக்குமே இருக்கிறது. நாம் வாழும் இந்த உலகில் வாழுகின்ற பலரும் படிப்பு செலவு, மருத்துவ செலவு, திருமண செலவு மற்றும் வீட்டு வாடகை செலவு என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகிறார்கள். இந்த கடன் பிரச்சனையினை சரிசெய்ய வேண்டும் என்ற காரணத்தினால் பலரும் எத்தனையோ பரிகாரங்களை செய்து வருகிறார்கள்.
கடன் பிரச்சனை தீருவதற்கு நமக்கு சுக்கிர பகவானின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும். அதேபோல வெற்றியை தரக்கூடிய பொருள் வெற்றிலை தான். வெற்றிலை மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பொருள் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
காரணம் நம் வீட்டில் எந்த பூஜை நடைபெற்றாலும் அதில் வெற்றிலையும் கட்டாயம் இருக்கும். நாம் எந்தவொரு நல்ல காரியங்கள் செய்தாலும் அதில் கட்டாயம் வெற்றிலை இருக்கும்.
இன்னும் சொல்லப்போனால், அனுமான் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக அனுமனின் தலையில் சீதா தேவி அவர்கள் வெற்றிலையை வைத்து தான் ஆசிர்வாதம் செய்தார்கள். இதை வைத்து தான் வெற்றிலைக்கு ஆன்மீகத்தில் முக்கியத்துவம்இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
Read Also : இந்த டீக்களை குளிர்காலத்தில் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெற்றிலை பரிகாரம்:
முதலில் கடையிலிருந்து சுத்தமான மற்றும் கிழியாமல் உள்ள 6 வெற்றிலைகளை வாங்கி கொள்ள வேண்டும். சுக்கிர பகவானுக்கு உகந்த எண் ஆறு என்பதால் ஆறு வெற்றிலைகளை எடுத்து கொள்ளவும்.
ஒரு மஞ்சள் கலர் துணி அல்லது நகை வைத்து கொடுக்கும் ரோஸ் கலரில் இருக்கும் துணியை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் ஆறு வெற்றிலைகளை வைத்து அதனுடன் பாக்கு மற்றும் ஒரு ரூபாய் நாணயம் வைத்து மடித்து கொள்ள வேண்டும்.
பின் இந்த துணியை பூஜை அறையில் வைத்து கடன் பிரச்சனை நீங்க வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ள வேண்டும்.
பிறகு மடித்து வைத்துள்ள இந்த துணியை பணம் வைக்கிற இடங்களான கல்லாப்பெட்டி,பீரோ போன்ற இடங்களில் வைத்து விடவேண்டும். பின் 3 தினங்கள் கழித்து இந்த வெற்றிலையை நீங்கள் வயதானவர்களுக்கு கொடுத்து விடலாம். இதுபோல நீங்கள் ஒரு மாதம் செய்து வந்தால் உங்கள் வீட்டில் கடன் பிரச்சனைகள் நீங்கி பணவரவு அதிகரிக்க தொடங்கும்.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க


