Remedies to come true : இன்றைய சூழ்நிலையில் யாருக்கு தான் கஷ்டங்கள் இல்லை, யாரிடம் பேச ஆரம்பித்தாலும் அவர்களுடைய கஷ்டங்களை வரிசையாக சொல்ல தொடங்கிவிடுவார்கள். அப்படிப்பட்ட சில கஷ்டங்களை நீக்குவதற்கு கண்டிப்பாக சில பரிகாரம் செய்தாலே போதும். அந்த பரிகாரம் என்ன என்பதை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். பொதுவாக அனைவரும் நினைத்த காரியங்கள் நடக்க வேண்டும் என்று நினைத்தால் என்ன செய்வோம் ஆனால் சிலருக்கு சீக்கிரமாக இந்த காரியம் நடந்தால் நல்ல இருக்குமே என்று தோன்றும் அப்படி இருக்கும் போது சீக்கிரமாக நடக்க வழிகள் இருந்தால் அதனை செய்யாமல் இருப்பீர்களா. செய்வீர்கள் வாங்க அதை பற்றி தெரிந்துகொண்டு அதனை செய்வோம்..!

நினைத்தது நடக்க பரிகாரம்: Remedies to come true
இதை யார் செய்ய வேண்டுமென்றால் திருமணம் நடக்காமல் உள்ளவர்கள், வீட்டுமனை பிரச்சனை தீரவு வேண்டும் என்று கருதுபவர்கள், குழந்தை பாக்கியம் போன்ற காரியங்கள் உடனே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் செய்யலாம்.
- 1 – மஞ்சள் கிழங்கு
- 1 – வெற்றிலை
- சிறிய அளவு நூல்
- ஸ்கெச் (கருப்பு நிறத்தில் இருக்கக்கூடாது )
1 வெற்றிலையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது வேறு ஒருவருக்கு நடக்க வேண்டும் என்றால் அந்த வெற்றிலையில் அவர்கள் பெயரை எழுதி அதில் என்ன கோரிக்கை வேண்டுமோ அதனை அப்படியே எழுதாதலாம்.
ஸ்கெச் கருப்பு கலரில் இருக்க கூடாது வேறு எந்த நிறமாக இருந்தாலும் அதனை பயன்படுத்தி எழுதி கொள்ளலாம். எழுதிய பிறகு அதில் மஞ்சள் கிழங்கை வைத்து மடித்து. கையில் வைத்துக்கொண்டு பூஜை அறையில் அமர்ந்துகொண்டு நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்று மனதில் நன்றாக வேண்டி கொள்ளவும் அதனை பூஜை செய்யும் அறையில் வைத்துகொள்ளவும்.
இதை உங்கள் காரியங்கள் நடக்கும் வரை நாள்தோறும் வழிபட்டு வரலாம். இதற்கான பலன் ஒரு வாரத்திலும் நடக்கலாம் அப்படி இல்லையென்றால் 3 வாரங்களில் பிரபஞ்சம் நடத்தி தரும்.
உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.
இப்போதே படிக்க



