Home Stories Photos Videos Join
TRENDS
நடிகை கீர்த்தி பாண்டியனின் கிளாமர் ஸ்டில்ஸ்
ஸ்ரீலீலா அசத்தல் கிளிக்ஸ்
ஹைதராபாத் பெண் தொழிலதிபருடைய ரோல்ஸ்-ராய்ஸ் கார்!
வளர்ந்து வரும் கேரளா தொழிலதிபருடைய புது போர்ஷே கார்!
உலகின் பணக்கார பெண் ஃபிரான்ஷுவா பெட்டன் கோர்ட் னுடைய சொத்தின் மதிப்பு !

எப்படிப்பட்ட கண்திருஷ்டியாக இருந்தாலும் இதை மட்டும் ஒருமுறை செய்தால் உடனடியாக நீங்கிடும்..!

Kan Thirusti Neenga Manthiram Tamil : பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே இருக்கும் ஒரு பொதுவான குணம் என்பது அது பொறாமை குணம் தான். இந்த…

Kan Thirusti Neenga Manthiram Tamil : பொதுவாக மனிதனாக பிறந்த அனைவருக்குமே இருக்கும் ஒரு பொதுவான குணம் என்பது அது பொறாமை குணம் தான். இந்த பொறாமை குணம் ஒரு சிலருக்கு குறைவாக இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தங்களை காட்டிலும் மற்றவர்கள் உயர்ந்துவிட்டார்கள் என்றாலே பிடிக்கவே பிடிக்காது. அவர்களை பார்த்து பார்த்து பொறாமை கொள்வார்கள். அதனால் இவர்களால் மற்றவர்களுக்கு கண்திருஷ்டி உண்டாகி அவர்களின் வாழ்க்கையில் பல தொல்லைகள் ஏற்படும்.

Kan Thirusti Neenga Manthiram Tamil
Kan Thirusti Neenga Manthiram Tamil

அதாவது உங்களின் வீட்டில் தொடர்ந்து ஆரோக்கிய பிரச்சனையும், பணப்பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் தொடர்ந்து உண்டாகின்றது என்றால் உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது உங்களின் வீட்டிற்கு வருபவர்கள் இவர்களால் உங்களின் வீட்டின் மீது கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். அதனால் தான் உங்கள் வீட்டில் ஏற்பட்ட அனைத்து கண்திருசிஷ்டியையும் நீங்க உதவும் சில எளிமையான வழிமுறைகளை பதிவிட்டிருக்கிறோம். எனவே இந்த பதிவை முழுவதுமாக படித்து இதில் கூறியுள்ளதை பின்பற்றி பயன் அடையுங்கள்.

கண் திருஷ்டி போக்கும் மந்திரம்: Kan Thirusti Neenga Manthiram Tamil

அதாவது தேய்பிறை அஷ்டமி நாளன்று இங்கே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை உங்களால் முடிந்தவரை பாராயணம் செய்து பைரவரை வணங்கினால் எல்லா வகையான கண்திருசிஷ்டி ஆபத்துக்களும், பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

மந்திரம்:

ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்

த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்

நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்

வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

பொருள்:

சிவந்த சிகையும் ஒளி நிறைந்த தேகத்தையும் உடைய பைரவரே, நமஸ்காரம். சூலம், உடுக்கை, கபாலம் ஆகியன தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் உருவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, நமஸ்காரம்.

முக்கண்கள் உடையவரே, ஆனந்த வடிவானவரே, பிரேத, பூத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, எல்லா புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

சில எளிய வழிமுறைகள்:

நம் வீட்டிற்குள் தீய சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உள்ள மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி நீங்கவும் மேலே கூறியுள்ள மந்திரத்தை சொன்ன பிறகு சில நடைமுறைகளை பின்பற்றுங்கள்.

அதாவது பெளர்ணமி நாளில் வீட்டு வாசலில் நீர் பூசணி காய் தொங்கவிடலாம். அதேபோல் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று வீட்டு வாசலில் காலை 9 மணிக்கு கற்றாழையை கட்டி தொங்க வைக்கலாம்.

புதியது

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி போன்ற பல கட்டுரைகளை படிக்க vtamiltv.com வில் பாருங்கள்.

இப்போதே படிக்க